sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

/

நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 28, 2024 12:39 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையாக சீரமைப்பு பணி தற்போது நடந்து வருகிறது.

இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்கும் வகையில், திருமழிசை, பாப்பன்சத்திரம், தண்டலம், செட்டிபேடு உட்பட பல இடங்களில் ஆவடி மாநகர காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டு தடுப்புகளால் சில நேரங்களில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதோடு விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலை ஆணைய சட்ட விதிகளின் கீழ் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித தடுப்புகளும் வைக்கக்கூடாது. காவல் துறையினர் நெடுஞ்சாலைத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கின்றனர்.' என்றார்.






      Dinamalar
      Follow us