/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மே 16, 2025 02:44 AM

கடம்பத்துார்,
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சிக்குட்பட்டது அகரம் கிராமம். இங்கு வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் பல இடங்களில் இளைப்பாறுகின்றன.
இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியே தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒன்றிய, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எவ்வித நடடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.