sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் உலவும் கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

சாலையில் உலவும் கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் உலவும் கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் உலவும் கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜன 31, 2025 02:48 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம், புண்டரீகபுரம் கிராமத்தில், 6,000த்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை, அப்பகுதிவாசிகள் வளர்த்து வருகின்றனர்.

சிலர், தங்கள் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். அவ்வாறு விடப்பட்ட கால்நடைகள், சாலையில் சுற்றித்திரிக்கின்றன.

குறிப்பாக, அரக்கோணம் --- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் கால்நடைகள் உலா வருகின்றன.

இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.

மேலும், சாலை நடுவில் கும்பலாக அமர்ந்து கொள்ளும் கால்நடைகள், திடீரென எழுந்து ஓடுவதாலும், அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வதாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்திற்கு உள்ளாகின்றனர்.

நான்கு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், அவ்வப்போது கால்நடைகளால் விபத்திற்குள்ளாகி, அவற்றில் பயணம் செய்வோர் காயமடைகின்றனர்.

இதுபோன்ற விபத்து சம்பவங்கள், இச்சாலையில் அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகள், அச்சத்துடனேயே செல்கின்றனர்.

எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us