sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரவில் கால்நடைகள் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

இரவில் கால்நடைகள் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இரவில் கால்நடைகள் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இரவில் கால்நடைகள் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 29, 2025 11:37 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் முதல் பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் வரையிலான, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் ஏராளமான காய்கறி, பழக்கடைகள் இயங்கி வருகின்றன.

அந்த கடைகளை வைத்திருப்போர் அழுகிய காய்கறி மற்றும் பழ கழிவுகளை, சாலையோரம் குவித்து வருகின்றனர். அதை உண்பதற்காக, மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை இரவு நேரத்தில் அவிழ்த்து விடுகின்றனர்.

இதனால், இரவு நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிவதும், ஜி.என்.டி., சாலையில் இளைப்பாறுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

ஜி.என்.டி., சாலையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, மாநில நெடுஞ்சாலை துறையினர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பெத்திக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இரவு நேரத்தில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us