/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
/
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 29, 2025 11:20 PM

கடம்பத்துார்: மப்பேடு - சுங்குவார்சத்திம் மாநில நெடுஞ்சாலையில் விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்குவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
தேசிய - மாநில நெடுஞ்சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும், மப்பேடு - சுங்குவார்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது.
சில நாட்களாக பலத்த மழையுடன் காற்று வீசியதால், நெடுஞ்சாலையோரம் உள்ள விளம்பர பேனர்கள் ஆங்காங்கே கிழிந்து தொங்கி கொண்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும், விளம்பர பேனர்கள் வைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதன்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்த வேண்டும்.
ஆனால், நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டங்கள் மீது வைக்கப்படும் 'மெகா சைஸ்' விளம்பர பேனர்கள், எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டு வருகின்றன. இதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
எனவே, நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர் வைப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

