sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் உலா வரும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சாலையில் உலா வரும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் உலா வரும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் உலா வரும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 16, 2024 01:44 AM

Google News

ADDED : டிச 16, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளான சின்னம்மாபேட்டை, பெரிய களக்காட்டூர், தொழுதாவூர் உள்ளிட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சில உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காததால், தக்கோலம் -- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

இச்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சில நேரங்களில் கால்நடைகள் மீது வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

இதனால், சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கலெக்டர் பலமுறை அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் உலா வரும் கால்நடைகளின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us