/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் கால்வாய் பணி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
கிடப்பில் கால்வாய் பணி அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 02, 2024 11:24 PM

கும்மிடிப்பூண்டி:சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், கும்மிடிப்பூண்டி சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பில், ஒரு மாதத்திற்கு முன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்வாய் பணிகள் முழுமை பெறாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதற்காக தோண்டப்பட்ட மெகா பள்ளம் தற்போது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. அந்த பள்ளத்தை சுற்றி எச்சரிக்கை தடுப்புகளும் வைக்கப்படவில்லை.
இது சிப்காட் தொழிற்சாலைகள், தாலுகா அலுவகலம் மற்றும் சார் - பதிவாளர்கள் அலுவலகம் செல்பவர்கள், தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா நோக்கி செல்பவர்கள் சந்திக்கும் முக்கிய பகுதியாகும்.
சற்று கவனம் தவறினாலும், அந்த பள்ளத்தில் வாகனங்கள் கவிழ கூடிய ஆபத்தான சூழல் நிலவுகிறது.
அலட்சியமாக விடப்பட்டுள்ள பள்ளத்தை சுற்றி தடுப்பு வைக்க வேண்டும். துரிதமாக பணி மேற்கொண்டு முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

