/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெங்கத்துாரில் நிரம்பி வழியும் குப்பை கிடங்கு நோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள், மக்கள்
/
வெங்கத்துாரில் நிரம்பி வழியும் குப்பை கிடங்கு நோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள், மக்கள்
வெங்கத்துாரில் நிரம்பி வழியும் குப்பை கிடங்கு நோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள், மக்கள்
வெங்கத்துாரில் நிரம்பி வழியும் குப்பை கிடங்கு நோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள், மக்கள்
ADDED : மே 09, 2025 01:50 AM

வெங்கத்துார்,:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தினமும் இரண்டு டன் குப்பை சேகரமாகி வருகிறது. இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பயன்பாட்டிற்கு வராததால், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் அரசு நிலத்தில் கொட்டப்பட்டு வருகிறது. பின், கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன் வெங்கத்துார் ஊராட்சி திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, ஒன்றரை மாதமாக குப்பை அகற்றப்படாததால் கிடங்கு முழுதும் நிரம்பி நெடுஞ்சாலையோரம் குவிந்து வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

