/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் ஒருவழிச்சாலையானதால் வாகன ஒட்டிகள் அவதி
/
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் ஒருவழிச்சாலையானதால் வாகன ஒட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் ஒருவழிச்சாலையானதால் வாகன ஒட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் ஒருவழிச்சாலையானதால் வாகன ஒட்டிகள் அவதி
ADDED : ஜன 24, 2025 01:31 AM

கடம்பத்துார்:கடம்பத்துார ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சி.
இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியே தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் பல இடங்களில் இளைப்பாறுகின்றன.
இதனால் இந்த நெடுஞ்சாலை ஒருவழிச்சாலையாக மாறியதால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருவதோடு விபத்தில் சிக்கி கருகி்னறனர். சில நேரங்களில் விபத்தில் பலியாகி வரும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

