sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெற்களமாகிய தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி

/

நெற்களமாகிய தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி

நெற்களமாகிய தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி

நெற்களமாகிய தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 17, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:பாகசாலை கொசஸ்தலையாற்று தரைப்பாலத்தில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியத்தில், நவரை பருவத்தில், 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. அதன்படி வீரராகவபுரம், கூளூர், களாம்பாக்கம் பாடசாலை உட்பட ஆறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பாகசாலை பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய, வழிநெடுக சாலையில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.

திருவாலங்காடு -- பேரம்பாக்கம் சாலையில் கொசஸ்தலையாற்றின் தரைப்பாலத்தில் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் ஒரு வழி சாலையாக மாறியுள்ளது.

அவ்வழியே செல்லும் வாகனங்கள், ஒரு வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.

சமீபத்தில் பெய்த மழை காரணமாக, சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் முளைவிட துவங்கி விட்டதால் விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us