/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி
/
அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி
அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி
அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை குளமானதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 22, 2024 01:37 AM

திருவள்ளூர்:சென்னை --- பெங்களூர் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
நெடுஞ்சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டும் மழைநீர் வெளியேற வழியில்லை.
இதனால் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது. இணைப்புச் சாலை பணிகளும் பல பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சேதமடைந்த சாலை சிறு மழைக்கே குளம்போல் மாறியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பெய்த சிறு மழையில் அதிவிரைவு நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.