/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
/
ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 29, 2025 12:31 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி.
இங்குள்ள நெடுஞ்சாலை வழியே, தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில், வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையிலலேயே உலா வந்து இளைப்பாறுகின்றன.
இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.