sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பில்லாத தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி

/

பராமரிப்பில்லாத தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி

பராமரிப்பில்லாத தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி

பராமரிப்பில்லாத தேசிய நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 01, 2025 12:08 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் பணிகள், 2018 ம் ஆண்டின் இறுதியில் துவங்கி நடந்து வருகிறது.

மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் - திருப்பெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் துவக்கப்பட்ட திருப்பெரும்புதுார் - வாலாஜா இடையே, 71 கி.மீ., சாலை விரிவாக்கப் பணிகள், 2021ல் முடிந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்னும் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வாகனங்கள் சென்று வரும் இந்த நெடுஞ்சாலையில், தற்போது ஆங்காங்கே சாலை சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது.

குறிப்பாக திருமழிசை, குத்தம்பாக்கம், நசரத்பேட்டை, பூந்தமல்லி உட்பட பல இடங்களில் சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

விபத்துக்களுக்கும் வழிவகுக்கும் நிலை உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us