/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 21, 2025 03:01 AM

நரசிங்கபுரம், :நரசிங்கபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து உள்ளதால், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் குமாரசேரி, இருளஞ்சேரி சாலை வழியாக, நரசிங்கபுரத்தில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இச்சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து, சாலையோரங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பக்தர்கள் மற்றும் பகுதிமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.