/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் குப்பை, கழிவுநீர் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
/
நெடுஞ்சாலையில் குப்பை, கழிவுநீர் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் குப்பை, கழிவுநீர் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையில் குப்பை, கழிவுநீர் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 13, 2025 11:55 PM

திருமழிசை, சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையினை ஆறுவழி சாலையாக விரிவாக்கும் பணி, 2018ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டன.
இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில் இருவழிப்பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை யையொட்டிய திருமழிசை, பூந்தமல்லி உட்பட பல பகுதிகள் குப்பை மேடாகவும், கழிவுநீர் குளமாகவும் மாறி வருகிறது.
மேலும் மழைநீர் கால்வாய்கள், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் கழிவுநீர் கால்வாய்களாகவும் மாறி வருகின்றன.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், இணைப்பு சாலையில் செல்லும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து குப்பையை அகற்றவும் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

