/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நாதஸ்வர பயிற்சி பள்ளி
/
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நாதஸ்வர பயிற்சி பள்ளி
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நாதஸ்வர பயிற்சி பள்ளி
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நாதஸ்வர பயிற்சி பள்ளி
ADDED : அக் 19, 2024 12:46 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான நந்தி ஆற்றின் கரையோரம் கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம், முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், 98 லட்சம் ரூபாய் மதிப்பில் நாதஸ்வரம், தவில் பயிற்றுவிக்கும் பயிற்சி பள்ளி கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது.
இந்த புதிய கட்டடம், 3,500 சதுரடியில் இரண்டு வகுப்பறைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்பறையில், 50 மாணவர்கள் வீதம் அமரும் வகையில், ஏற்படுத்தப்பட்ட கட்டடத்தில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து கற்கும் வசதி உள்ளது. இப்பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. இருப்பினும் திறக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளி கட்டடம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளதாக ஹிந்து அறநிலை துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். அரசு தான் முடிவெடுக்கப்படும்' என்றார்.

