/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய பால் பேட்மின்டன் போட்டி: சாம்பியன் வென்றது தமிழக அணி
/
தேசிய பால் பேட்மின்டன் போட்டி: சாம்பியன் வென்றது தமிழக அணி
தேசிய பால் பேட்மின்டன் போட்டி: சாம்பியன் வென்றது தமிழக அணி
தேசிய பால் பேட்மின்டன் போட்டி: சாம்பியன் வென்றது தமிழக அணி
ADDED : அக் 01, 2024 07:28 AM

திருவொற்றியூர்: இந்திய தேசிய பூப்பந்தாட்ட இணையம் சார்பில், 43வது தேசிய சப் ஜூனியர் பால் பேட்மின்டன் போட்டி, ஹரியானாவின், ரொட்டாக் நகரில், செப்., 25 - 29ம் வரை நடந்தது. 28 மாநிலங்களில் இருந்து 15 வயதிற்குட்பட்ட சிறுவர் - சிறுமியர் என, 56 அணிகள் பங்கேற்றன.
தமிழகம் சார்பில், மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 20 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.
அதன்படி, சிறுமியர் இரட்டையர் பிரிவில், தமிழக அணி, 35 - 30 என்ற புள்ளிக்கணக்கில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. சிறுவர் இரட்டையர் பிரிவில், கேரள அணியை, 35 - 32 என்ற புள்ளிக்கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்றது.
கலப்பு இரட்டையர் பிரிவில், தமிழகம் - ஆந்திர அணிகள், கூட்டு வெற்றியை பெற்றுள்ளன.
ஐவர் சிறுமியர் பிரிவில், ஆந்திர மாநில அணியை, 35 - 22, 35 - 19 என்ற புள்ளிக்கணக்கில் தமிழக அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஐவர் சிறுவர் பிரிவில், தமிழக அணி, 35 - 30, 31 - 35, 35 - 28 என்ற புள்ளிக்கணக்கில், ஆந்திர அணியை கிரங்கடித்து, வெற்றி வாகை சூடியது.
மொத்தமுள்ள ஐந்து பிரிவுகளில், நான்கு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
அவர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி, கவுரவிக்கப்பட்டனர்.
இதில், தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலர் எழிலரசன் தலைமையிலான, தமிழக ஐவர் சிறுமியர் அணியினர், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற தமிழக அணி வீரர்கள், பயணியர் ரயில் வாயிலாக, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, சென்ட்ரல் ரயில் நிலையம் வருகின்றனர்.