/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவதில் அலட்சியம்
/
பழுதடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவதில் அலட்சியம்
பழுதடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவதில் அலட்சியம்
பழுதடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றுவதில் அலட்சியம்
ADDED : டிச 08, 2024 02:54 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் ஊராட்சி, மேல்கசவராஜ பேட்டையில் அங்கன்வாடி மையம், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்டது. தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், நான்கு மாதங்களுக்கு முன், அங்கன்வாடி மையம் பூட்டப்பட்டது.
தற்போது, அங்கன்வாடி மையம் அதே பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இயங்கி வருகிறது. மேலும், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி உணவு இடைவேளையின் போது மாணவர்கள் பழுதடைந்த அங்கன்வாடி மையம் அருகே சென்று விளையாடுவதால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் கிராம சபையில் அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றி அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறையும், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானத்திலும் நிறைவேற்றி, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆனாலும், அங்கன்வாடி மையம் கட்டடம் உள்ளது. தற்போது, மழை காலம் என்பதால், ஆபத்து நிகழாத முன், பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.