sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேரம்பாக்கம் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில்...அலட்சியம்! : யார் பொறுப்பு என்பதில் துறைகளிடையே குழப்பம்

/

பேரம்பாக்கம் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில்...அலட்சியம்! : யார் பொறுப்பு என்பதில் துறைகளிடையே குழப்பம்

பேரம்பாக்கம் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில்...அலட்சியம்! : யார் பொறுப்பு என்பதில் துறைகளிடையே குழப்பம்

பேரம்பாக்கம் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில்...அலட்சியம்! : யார் பொறுப்பு என்பதில் துறைகளிடையே குழப்பம்


ADDED : பிப் 02, 2025 08:26 PM

Google News

ADDED : பிப் 02, 2025 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரம்பாக்கம்:பேரம்பாக்கத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்டறிந்து அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், வருவாய், நீர்வளம், ஊரக வளர்ச்சித் துறையினர் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். யார் அகற்றுவது என்பதில், துறை அதிகாரிகளிடையே உள்ள குழப்பத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் தொடர்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகே சர்வே எண் 274ல், 1.75 ஏக்கர் மற்றும் சர்வே எண் 308ல் 17.91 ஏக்கர் என, மொத்தம் 19.66 ஏக்கரில் வண்டிப்பாதை, கசம் என்னும் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து 40க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், மற்றும் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம், சர்ச், ரேஷன் கடை போன்ற 60க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.

இந்நிலையில், அப்பகுதியில் கடை நடத்தி வரும் ஒருவர், பட்டா கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையில், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை அகற்ற வேண்டும் என, 2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு வருவாய் துறையினர் தகவல் அளித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன. இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, 2022ம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, வருவாய், ஊரக வளர்ச்சி, நீர்வள ஆதாரத்துறையினர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆக்கிரமிப்பு பணிகளை திருவள்ளூர் டி.எஸ்.டி., சந்திரதாசன் தலைமையில் மப்பேடு போலீசாருடன் அன்று ஒருநாள் மட்டும் நடந்த ஆக்கிரமிப்பு பணி மேற்கொண்டனர்.

அதன் பின், ஓராண்டாக எவ்வித ஆக்கிரமிப்பு நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் தற்போது, ஆளும் தி.மு.க., கட்சியினரே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு ஆவின் பால் கடை போன்ற பிற கடைகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2024ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின்படி, வருவாய், ஊரக வளர்ச்சி, நீர்வள ஆதாரத் துறையினர் திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில் மப்பேடு போலீசாருடன் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கட்டடம் உள்ளிட்ட 20 கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

ஆனால், பேருந்து நிலையம் எதிரே, இரு ஆண்டுகளாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கன.

இந்நிலையில், நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகம் அருகே தற்போது புதிய துணை வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி, வருவாய்த் துறையினர் பரஸ்பர குற்றச்சாட்டு தெரிவித்து வருவதே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகி்னறனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பெயரளவிற்கு ஆக்கிரமிப்பை அகற்றுவது வேடிக்கையாக உள்ளது என அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நீர்நிலை ஆதாரத் துறையினர் கூறுகையில், ''பேரம்பாக்கத்தில் சர்வே எண் 274ல் உள்ள வண்டிப்பாதை கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உட்பட பகுதியாகும. இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆக்கிரமிப்புளை அகற்ற வேண்டும் என, கேட்டுள்ளோம். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் வருவாய்த் துறையினர் கூறுகையில், ''பேரம்பாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து பட்டியலிட்டு அகற்ற சம்பந்தப்பட்ட கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்துள்ளோம். அரசு விதிமுறைகளின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ''பேரம்பாக்கத்தில் சர்வே எண் 274, 308ல் உள்ள வண்டிப்பாதை, கசம் ஆகிய பகுதிளை அகற்ற வேண்டும் என, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 83ன்படி ஊராட்சி கட்டுப்பாட்டில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைருக்கு முழு அதிகாரம் உண்டு. ஊராட்சி தலைவர் தான் அகற்ற வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

எனவே, மாவட்ட நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நீர்நிலை பகுதியில் கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்களே புதிய அலுவலகம் கட்டி வருவதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரம்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us