ADDED : பிப் 11, 2026 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: குன்றத்துார் அருகே, தண்டலம் பகுதியை சேர்ந்த, 28 வயது பெண், நேற்று முன்தினம் இரவு, ஸ்கூட்டரில் குன்றத்துாரில் இருந்து தண்டலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
தண்டலம் முத்துமாரியம்மன் கோவில் சாலையில் சென்றபோது, எதிர் திசையில் ஒரே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இடிப்பது போல் பைக்கை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த பெண், பைக்கில் வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்து, அவர்களை தனது மொபைல் போனில் படம் எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், அந்த பெண்ணின் முகத்தில் தாக்கிவிட்டு தப்பினார்.
காயமடைந்த அந்த பெண், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் வி சாரிக்கின்றனர்.

