sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முட்டை வேண்டாம்... வாழைப்பழம் போதும் 1.42 லட்சத்தில் 271 மாணவர் மட்டும் தேர்வு

/

முட்டை வேண்டாம்... வாழைப்பழம் போதும் 1.42 லட்சத்தில் 271 மாணவர் மட்டும் தேர்வு

முட்டை வேண்டாம்... வாழைப்பழம் போதும் 1.42 லட்சத்தில் 271 மாணவர் மட்டும் தேர்வு

முட்டை வேண்டாம்... வாழைப்பழம் போதும் 1.42 லட்சத்தில் 271 மாணவர் மட்டும் தேர்வு


ADDED : ஏப் 23, 2025 09:30 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் முட்டையை நிராகரித்து, 271 பேர் மட்டும் வாழைப்பழம் உண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில், 1 - 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, எம்.ஜி.ஆர்., சத்துணவு திடடத்தின் கீழ் மதிய சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாரத்தில் திங்கள் - வெள்ளி வரை வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், தக்காளி, புளி, எலுமிச்சை, கீரை உள்ளிட்ட கலவை சாதம், சாதம் மற்றும் சாம்பார் இவற்றுடன் உருளைக்கிழக்கு வறுவல், வேக வைத்த மற்றும் மசாலா, மிளகு முட்டை என, சத்தாண உணவு வழங்கப்பட்டு வருகிறது. முட்டை சாப்பிடாதோருக்கு, வாழைப்பழம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியம் மற்றும் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி என, மொத்தம் 1,535 சத்துணவு மையங்கள், பள்ளிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில், பள்ளிகளில் பயிலும் 1,90,425 மாணவ - மாணவியரில், 1,42,832 பேர் மதிய சத்துணவு உட்கொள்கின்றனர். மேலும், 1,42,561 பேர் முட்டை உட்கொள்கின்றனர்.

மீதமுள்ள 271 பேர் மட்டுமே, வாழைப்பழம் உட்கொள்கின்றனர். அதுவும், அவர்கள் அனைவரும் புழல் ஒன்றியத்தில் மட்டுமே உள்ளனர் என்பது வியப்பிற்கு உரியதாக உள்ளது.






      Dinamalar
      Follow us