sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போலி நகை அடகு வைக்க முயன்ற வடமாநில நபர் கைது

/

போலி நகை அடகு வைக்க முயன்ற வடமாநில நபர் கைது

போலி நகை அடகு வைக்க முயன்ற வடமாநில நபர் கைது

போலி நகை அடகு வைக்க முயன்ற வடமாநில நபர் கைது


ADDED : பிப் 04, 2025 01:11 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மதுரவாயல் ஏரிக்கரை, கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் பர்வின் குமாவத், 32. இவர், தன் வீட்டு வளாகத்தில் 'கிருஷ்ணாஅடகு கடை' நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், நேற்று முன்தினம் காலை தங்க மோதிரம் அடகு வைக்க வந்துள்ளார்.

பர்வின் குமாவத் அதை சோதனை செய்து பார்த்தபோது, அது போலி என்பது தெரியவந்தது.

சுதாரித்தவர், சம்பந்தப்பட்ட நபரை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி விட்டு, அவருக்கு தெரியாமல் தன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து, அந்த நபரை பிடித்து, மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஆதில் உசேன், 40, என, தெரிந்தது. இவர், தங்க முலாம் பூசப்பட்ட மோதிரத்தை, தங்க மோதிரம் எனக்கூறி அடகு வைத்து மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, உசேனை போலீசார் கைதுசெய்தனர்.






      Dinamalar
      Follow us