/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
/
சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 12, 2025 09:40 PM
ஊத்துக்கோட்டை:சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழக - ஆந்திர எல்லையில் இவ்வூர் உள்ளதால், ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசித் தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஆந்திராவை சேர்ந்த பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன. மேலும், சாலையில் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.
கால்நடை வளர்ப்பவர்கள் வீடுகளில் அவற்றை கட்டி போட்டு தீனி போடுவதில்லை. மாறாக சாலையில் திரிய விடுகின்றனர். மாடுகள் தீனிக்காக, அங்குள்ள பழம், பூ, காய்கறி கடைகளுக்கு செல்கின்றன. அப்போது வியாபாரிகள் அவற்றை துரத்தும்போது, பயத்தில் அவை ஓடுகின்றன. இதில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், சாலையில் திரிய விடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. அதில், ஒரு வாரத்திற்குள் மாடுகளை வீடுகளில் கட்டாமல் சாலையில் திரியவிட்டால், மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து நடவடிக்கை எடுக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.