sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது

/

 ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது

 ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது

 ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது


ADDED : நவ 16, 2025 02:39 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: தமிழக பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, நேமம் பகுதியில் பதுங்கியிருந்தவரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி, அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் 'ஒற்றைக்கண்' ஜெயபால், 65.

இவர் மீது, ஆற்காடு சுரேஷ் கொலை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க திட்டம் தீட்டி, வெள்ளவேடு அடுத்த நேமம் பகுதியில் பதுங்கியிருப்பதாக, வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு நேமம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நின்று கொண்டிருந்த ஜெயபாலை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us