ADDED : ஆக 30, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி சரவணபொய்கை குளம் பகுதியில், மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.
திருத்தணி முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை என்கிற திருக்குளம் பகுதியில், 70 வயதான மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக, திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.