/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொதிகலன் வெடித்த விபத்தில் ஒருவர் பலி
/
கொதிகலன் வெடித்த விபத்தில் ஒருவர் பலி
ADDED : அக் 24, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ராமசந்திராபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், கடந்த 20ம் தேதி இரவு கொதிகலன் வெடித்தது.
அப்போது, பணியில் இருந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் யாதவ், 32, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் யாதவ், 45, அக்பர் ஆலம், 31, ஆகியோர் தீக்காயமடைந்தனர்.
பாதிரிவேடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவன்குமார் யாதவ், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரும், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

