ADDED : ஆக 25, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு, மாநில நெடுஞ்சாலையில் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில், பைக்கில் சென்றவர் படுகாயமடைந்தார்.
ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 46. இவர், நேற்று 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில், பள்ளிப்பட்டில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த, 'டாடா ஏஸ்' சரக்கு ஆட்டோ மோதியது.
இதில், படுகாயமடைந்த பாலகிருஷ்ணன், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.