sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும் பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம்

/

வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும் பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம்

வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும் பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம்

வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும் பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம்


ADDED : ஏப் 17, 2025 01:49 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த மேதினாபுரம் பகுதியில், தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியின் ஆண்டு விழா தாளாளர் எஸ்.பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வேதநாயகி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில், தளபதி கல்லுாரி தலைவரும், கடலுார் எம்.பி.,யுமான எம்.கே.விஷ்ணுபிரசாத், பட்டிமன்ற நடுவரும், பேச்சாளருமான நகைச்சுவை நாவலர் புலவர் ம.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று, கல்லுாரி அளவிலும், பல்கலைக் கழகம் அளவிலும் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியருக்கு பரிசு, சான்றுகள் வழங்கி பாராட்டினர்.

தொடர்ந்து, பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம் பேசியதாவது:

மாணவர்களுக்கு கல்வி தான் ஆதாரம். வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும். கல்வியால் மாணவர்கள் எதையும் சாதிக்கலாம்.

மாணவர்கள் கவனச் சிதைவு இல்லாமல் இலக்கை நோக்கி சென்றால், எந்த உயரத்தையும் எளிதாக தொடலாம். மாணவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். பெற்றோரை மதிக்காதவர்கள், வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியாது. தற்போது மாணவியர் அனைத்து துறைகளிலும் சாதித்து காட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us