sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புட்லுார் அம்மன் கோவில் எதிரில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு

/

புட்லுார் அம்மன் கோவில் எதிரில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு

புட்லுார் அம்மன் கோவில் எதிரில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு

புட்லுார் அம்மன் கோவில் எதிரில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு


ADDED : ஜன 20, 2025 11:56 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில், வணிக வளாகம் கட்டுவதற்கு அப்பகுதி கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் அடுத்த, புட்லுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

கோவில் வாசலில், பூ, பழம், விபூதி, குங்குமம், வளையல் போன்ற கோவிலுக்கு தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

இந்த நிலையில் இந்தக் கோவில் வளாகத்தில், 1.76 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வணிக வளாகம் கட்டப்படுவதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவித்துள்ளது.

இதனால் கோவில் வாசலில் உள்ள கடைகள் மற்றும் ஒரு சில குடியிருப்புகள் அகற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இதனால் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் கோவில் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களுக்கு மாற்று இடம், கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, வலியுறுத்தி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us