sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு விமரிசை

/

கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு விமரிசை

கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு விமரிசை

கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு விமரிசை


ADDED : ஏப் 14, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் ஒருபகுதியாக நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு கடம்பத்துார், மணவாளநகர் உட்பட பல பகுதியில் நேற்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.

கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நடந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடம்பத்தூர் புனித மத்தேயு ஆலயத்தின் சார்பாகவும், சி.எஸ்.எஸ்.ஐ., குருசேகரம் கடம்பத்தூர் இணைந்து புனித குரு தோலை ஞாயிறு விழாவை கொண்டாடினார்கள்.

தவக்காலத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக வரும் 18ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும், 20ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

ஊத்துக்கோட்டையில் குறுத்தோலை ஞாயிறு


ஊத்துக்கோட்டை:குறுத்தோலை ஞாயிறு சிறப்பு ஊர்வலம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், கத்தோலிக்க திருச்சபையின், அடைக்கல அனண ஆலயம் சார்பில், பங்குதந்தை அலெக்ஸ்சகாயராஜ் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர் சாலை, மாதா மரக்கடையில் துவங்கிய ஊர்வலம், பஜார் வழியே, அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தது. இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் திரளாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us