sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

/

தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்


ADDED : ஏப் 23, 2025 02:35 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கவர்களை, ஊராட்சி நிர்வாக துப்புரவு ஊழியர்கள், நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் அலுவலக கிடங்கு அருகில் கொட்டப்படுகிறது.

இந்த குப்பையை வைத்து உரம் தயாரிப்பதற்கு உரக்குடில்கள் அமைத்தும், முறையாக பராமரித்து குப்பை பிரித்து எடுக்காமல் மொத்தமாக குப்பை கொட்டி, தீயிட்டு எரிக்கப்படுகின்றன. இதனால், வேளாண் கூடுதல் கிடங்கில் வேலை செய்யும் அலுவலர்கள் குப்பையில் இருந்து எழும் புகையால் அவதிப்படுகின்றனர்.

துப்புரவு ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு, குப்பையில் இருந்து உரம் தயாரிக்காமல், ஓரளவு குப்பை சேர்ந்ததும், தீயிட்டு கொளுத்துகின்றனர்.

தொடர்ந்து, குப்பைக்கு தீ வைத்து கொளுத்துவதால், அங்கு புகை மண்டலமாக மாறுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பை தீயிட்டு கொளுத்துவதை தடுத்து நிறுத்தி, உரம் தயாரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us