/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேமிப்பு கிடங்காக மாறிய ஊராட்சி மன்ற அலுவலகம் வெங்கத்துார் மக்கள் அதிருப்தி
/
சேமிப்பு கிடங்காக மாறிய ஊராட்சி மன்ற அலுவலகம் வெங்கத்துார் மக்கள் அதிருப்தி
சேமிப்பு கிடங்காக மாறிய ஊராட்சி மன்ற அலுவலகம் வெங்கத்துார் மக்கள் அதிருப்தி
சேமிப்பு கிடங்காக மாறிய ஊராட்சி மன்ற அலுவலகம் வெங்கத்துார் மக்கள் அதிருப்தி
ADDED : நவ 29, 2025 03:41 AM

வெங்கத்துார்: புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம் பயன்பாட்டிற்கு வராமல், சேமிப்பு கிடங்காக மாறியுள்ளதால், வெங்கத்துார் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகரில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, 2020 ஜனவரி மாதம் துவங்கியது.
இந்நிலையில், ஊராட்சி அலுவலகம், கடந்த ஜனவரி 1ம் தேதி திறப்பு விழா நடத்தப்பட்டதாக கல்வெட்டு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஊராட்சி அலுவலகம் பயன்பாட்டிற்கு வராமல், கிராம சேவை மையத்திலேயே இயங்கி வருகிறது.
புதிய ஊராட்சி அலுவலகம் அருகே, ரேஷன் கடை கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சிமென்ட், இரும்பு கம்பி போன்ற கட்டட பொருட்கள் வைக்கும் கிடங்காக, ஊராட்சி அலுவலகம் மாறியுள்ளது. இது, வெங்கத்துார் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெங்கத்துாரில் ஆய்வு செய்து, ஊராட்சி அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கடம்பத்துார் ஒன்றிய அலுவலர் கூறுகையில், 'ஊராட்சி அலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

