/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி செயலர் பணியிடம் காலி கடம்பத்துாரில் அல்லல்படும் மக்கள்
/
ஊராட்சி செயலர் பணியிடம் காலி கடம்பத்துாரில் அல்லல்படும் மக்கள்
ஊராட்சி செயலர் பணியிடம் காலி கடம்பத்துாரில் அல்லல்படும் மக்கள்
ஊராட்சி செயலர் பணியிடம் காலி கடம்பத்துாரில் அல்லல்படும் மக்கள்
ADDED : அக் 16, 2024 12:26 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இதில், திருமணிக்குப்பம், திருப்பந்தியூர், வெள்ளேரித்தாங்கல், தொடுகாடு, கூவம், கல்லம்பேடு, ராமன்கோவில், விடையூர் ஆகிய எட்டு ஊராட்சிகளில், ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஊராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த ஊராட்சிகளில் அருகில் உள்ள ஊராட்சி செயலர், கூடுதல் பணி மேற்கொள்வதால் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், ஊராட்சியில் அரசின் திட்டங்கள், தொகுப்பு வீடுகள், பிரதமர் மற்றும் கலைஞர் வீடு கட்டும் திட்டம், பழுதடைந்த வீடுகள் சீரமைப்பது உட்பட அடிப்படை தேவைகளுக்கு பகுதிவாசிகள் திணறி வருகின்றனர்.
தற்போது ஆன்லைனில் வீடு மற்றும் தண்ணீர் வரி வசூல் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுாறு நாள் வேலையிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் ஊராட்சி செயலர்கள் புலம்பி வருகின்றனர்.
இதேபோல் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் நேரத்தில் ஊராட்சி செயலர் பங்கேற்காமலேயே நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.