sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

/

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்


ADDED : மார் 29, 2025 02:17 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா விமரிசையாக நடைபெறும்.

பங்குனி உத்திர விழா, நேற்று காலை 9:00 மணிக்கு கோட்டை வாயிற்படி வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 10:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. ஏப்., 1ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது.

இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை - மாலை உற்சவர் சோமஸ்கந்தர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஏழாம் நாளான வரும் 7ம் தேதி கமலத்தேர் விழா நடைபெற உள்ளது.

வரும் 8ம் தேதி இரவு 10:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர் வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். கடைசி நாளான 10ம் தேதி பங்குனி உத்திரம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us