sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாநில கல்லுாரி மாணவன் மரணம் நிவாரணம் கேட்டு பெற்றோர் மனு

/

மாநில கல்லுாரி மாணவன் மரணம் நிவாரணம் கேட்டு பெற்றோர் மனு

மாநில கல்லுாரி மாணவன் மரணம் நிவாரணம் கேட்டு பெற்றோர் மனு

மாநில கல்லுாரி மாணவன் மரணம் நிவாரணம் கேட்டு பெற்றோர் மனு


ADDED : அக் 23, 2024 01:59 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி காலனி பகுதி சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சுந்தர்,22 என்பவர் சென்னை மாநில கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த, 4ம் தேதி சுந்தர் தனது நண்பர்கள் இருவருடன் கல்லுாரியில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு சென்னை பார்க் ரயில் நிலையத்திற்கு வந்த போது, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சுந்தர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் பலத்த காயமடைந்த சுந்தர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் நேற்று காலை சுந்தரின் பெற்றோர், அவரது உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் சுந்தரின் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோட்டாட்சியர், தீபாவிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

தொடர்ந்து சுந்தரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்,

கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய அரசு, கல்லுாரி மாணவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஏன், பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கூடாது என கோஷம் எழுப்பினர்.

திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமரசம் செய்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us