sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல பயணியர் எதிர்பார்ப்பு

/

திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல பயணியர் எதிர்பார்ப்பு

திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல பயணியர் எதிர்பார்ப்பு

திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல பயணியர் எதிர்பார்ப்பு


ADDED : மே 22, 2025 10:13 PM

Google News

ADDED : மே 22, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:வெள்ளம், இயற்கை இடர்பாடு சமயத்தில் மட்டும், திருவள்ளூரை பயன்படுத்தும் ரயில்வே நிர்வாகம், மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை ஏற்று, விரைவு ரயில்கள் நிறுத்தாததால், கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக, கோவை, மேட்டுப்பாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட தென்,மேற்கு மாவட்டங்கள், பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, சென்ட்ரலில் இருந்து போடிக்கும் ரயில் இயக்கப்படுகிறது.

திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான காக்களூர், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் வசிக்கும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்டத்தினர் ஏராளமாக தங்கி உள்ளனர். அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல, திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என, கோரிக்கை விடுத்தும் ரயில்வே நிர்வாகம் பாராமுகமாக உள்ளது.

இதுகுறித்து ரயில் பயணியர் சங்கத்தினர் கூறியதாவது:

திருவள்ளூரைச் சுற்றியுள்ளோர் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லவும், தொழில் நிமித்தமாகவும் ரயிலில் செல்ல, சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டி உள்ளது. குழந்தைகள், வயதானோர் மூட்டை, முடிச்சுகளுடன் சென்னை சென்ட்ரல் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட தலைநகரான திருவள்ளூரில், குறிப்பிட்ட 10 விரைவு ரயில்கள் நிறுத்திச் செல்ல வேண்டும் என, 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. குறிப்பிட்ட 10 ரயில்களை திருவள்ளூரில் நிறுத்திச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் பயணியர் எதிர்பார்க்கும் ரயில்கள்

சென்னை-கோவை எக்ஸ்பிரஸ்

சென்னை- பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

சென்னை- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

சென்னை- பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ்

சென்னை-லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ்

செங்கல்பட்டு- காச்சிகுடா எக்ஸ்பிரஸ்

சென்னை- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ்

சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

சென்னை- மங்களூரு எக்ஸ்பிரஸ்

சென்னை-போடி விரைவு ரயில்.






      Dinamalar
      Follow us