/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி
ADDED : ஏப் 05, 2025 10:19 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குடிநீர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அங்கு மகப்பேறு, பச்சிளங்குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதி உள்ளது. உள்நோயாளிகளாக 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமும், 3,000 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நவீன கட்டடம், மருத்துவ வசதி அளிக்கப்படும் இம்மருத்துவமனையில், குடிநீர் வசதி இல்லை. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வந்த அம்மா உணவகமும் இடித்து அகற்றப்பட்டது. இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தைகளை சுத்தம் செய்யவும், வெந்நீர் கிடைக்காமல் சாலையை கடந்து, கடைகளில் வாங்கும் அவலம் உள்ளது.
எனவே, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோர் வசதிக்காக, உணவகம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

