sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி

/

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி


ADDED : ஏப் 05, 2025 10:19 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குடிநீர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அங்கு மகப்பேறு, பச்சிளங்குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதி உள்ளது. உள்நோயாளிகளாக 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமும், 3,000 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நவீன கட்டடம், மருத்துவ வசதி அளிக்கப்படும் இம்மருத்துவமனையில், குடிநீர் வசதி இல்லை. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வந்த அம்மா உணவகமும் இடித்து அகற்றப்பட்டது. இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தைகளை சுத்தம் செய்யவும், வெந்நீர் கிடைக்காமல் சாலையை கடந்து, கடைகளில் வாங்கும் அவலம் உள்ளது.

எனவே, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோர் வசதிக்காக, உணவகம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us