/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ்களுக்கு இடையே சிக்கி அடகு கடை ஊழியர் பலி
/
பஸ்களுக்கு இடையே சிக்கி அடகு கடை ஊழியர் பலி
ADDED : ஏப் 04, 2025 09:56 PM
ஆவடி,:செங்குன்றம் அடுத்த பூச்சி அத்திப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் போப்பா, 52. இவர், திருநின்றவூரில் உள்ள அடகு கடையில் பணிபுரிந்தார். வழக்கம்போல பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு ஆவடி பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அந்நேரம், பூச்சி அத்திப்பேடில் இருந்து ஆவடி பேருந்து நிலையத்திற்கு தடம் எண்: 77பி அரசு பேருந்து வந்தது. பேருந்தில் ஓட்டுநராக திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் நாக அர்ஜுன், 30, மற்றும் நடத்துநராக அரக்கோணத்தைச் சேர்ந்த செல்வம், 45, ஆகியோர், பணியில் இருந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
பேருந்தில் இடம் பிடிப்பதற்காக, ஓடும் பேருந்தில் ஏறிய போப்பா, கூட்டம் அதிகமாக இருந்ததால், படியில் தொங்கியபடி சென்றுள்ளார்.
இந்த நிலையில், அங்கு நின்றிருந்த செங்குன்றம் செல்லும் தடம் எண்: 62 பேருந்துக்கு இடையே சிக்கினார். இதில், நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
ஆவடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.