/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பி.டி.புதுார் சுடுகாடு பராமரிப்பு படுமோசம்
/
பி.டி.புதுார் சுடுகாடு பராமரிப்பு படுமோசம்
ADDED : டிச 20, 2025 05:46 AM

திருத்தணி: திருத்தணி பி.டி.புதுார் சுடுகாட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப் படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் பி.டி.புதுார் கிராமத்தில், 2.5 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது.
சுடுகாட்டில் தேவையான மயான மேடை, ஆழ்துளை கிணறு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக செய்து தரவில்லை.
மேலும், சுடுகாட்டில் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், மக்கள் இறுதி சடங்கிற்கு செல்லும் போது கடும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, டி.புதுார் சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

