sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

40 அடி உயர கரும்புகையுடன் கழிவு எரித்ததால் மக்கள் அச்சம்

/

40 அடி உயர கரும்புகையுடன் கழிவு எரித்ததால் மக்கள் அச்சம்

40 அடி உயர கரும்புகையுடன் கழிவு எரித்ததால் மக்கள் அச்சம்

40 அடி உயர கரும்புகையுடன் கழிவு எரித்ததால் மக்கள் அச்சம்


ADDED : பிப் 06, 2025 01:32 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அருகே, கும்மிடிப்பூண்டி அடுத்த, பன்பாக்கம் கிராமத்தில் இருந்து, குருதானமேடு கிராமம் செல்லும் சாலை அமைந்துள்ளது. அந்த சாலைக்கும், அங்குள்ள பன்பாக்கம் ஏரிக்கும் இடையே, மலை போல் கழிவு குவிக்கப்பட்டிருந்தன. அதில், தொழிற்சாலை கழிவு, அதிக அளவில் இருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம், அந்த கழிவை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. மளமளவென பரவிய தீ, கட்டுக்கு அடங்காமல், கரும்புகையுடன், 40 அடி உயரத்திற்கு எரிந்தது. அருகில் உள்ள தனியார் ஐ.டி.ஐ., மற்றும் மாணவர் காப்பகத்தில் கரும்புகை சூழ்ந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவம், பன்பாக்கம் கிராமத்தினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us