sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பிருந்தாவன் நகர் சாலை படுமோசம் நடக்க முடியாமல் மக்கள் அவதி

/

பிருந்தாவன் நகர் சாலை படுமோசம் நடக்க முடியாமல் மக்கள் அவதி

பிருந்தாவன் நகர் சாலை படுமோசம் நடக்க முடியாமல் மக்கள் அவதி

பிருந்தாவன் நகர் சாலை படுமோசம் நடக்க முடியாமல் மக்கள் அவதி


PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்லுார், புட்லுார் ரயில் நிலையம் செல்லும் பிருந்தாவன் நகர் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் ஊராட்சியில் பிருந்தாவன் நகர் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, அவ்வழியாக நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது பெய்த மழையால், சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணியர், மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துடன் கடக்க வேண்டியுள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர், பள்ளத்தில் சிக்கி தடுமாறுகின்றனர்.

எனவே, திருவள்ளூர் ஒன்றிய அதிகாரிகள், சேதமடைந்த பிருந்தாவன் நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us