/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை இல்லாமல் மக்கள் அவதி
/
திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை இல்லாமல் மக்கள் அவதி
திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை இல்லாமல் மக்கள் அவதி
திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை இல்லாமல் மக்கள் அவதி
ADDED : பிப் 13, 2025 09:51 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலர், வணிக வரித் துறை, பத்திரப்பதிவு அலுவலகம், நில அளவை துறை, கிளை சிறைச்சாலை, உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
மேலும், ஆதார் சேவை மையமும் இங்கு செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலங்களுக்கு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாலுகா அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை வசதி இல்லை. வட்ட வழங்கல் அலுவலகத்தின் பின்புறம் உள்ள, கழிப்பறையில் கதவும் இல்லை; தண்ணீரும் வருவதில்லை.
இதனால், தாலுகா அலுவலகத்திற்கு வரும், பெண்களும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களும் கடும் அவதிபடுகின்றனர்.
எனவே, பொதுப்பணி துறை அலுவலர்கள், தாசில்தார் அலுவலகத்தில், கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.