/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 417 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 417 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 24, 2024 06:44 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 417 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நிலம் சம்பந்தமாக 120, சமூக பாதுகாப்புதிட்டம் 87, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 92, இதர துறை 73 என மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

