/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 26, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், நிலம் சம்பந்தமாக 116, சமூக பாதுகாப்பு திட்டம் 58, வேலைவாய்ப்பு வேண்டி 66, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 75 மற்றும் இதரதுறை 195 என மொத்தம் 510 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்-பொது, வெங்கட்ராமன், தனி துணை கலெக்டர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.