/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 444 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 444 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 18, 2025 03:27 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 444 மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வந்திருந்த மக்கள், நிலம் சம்பந்தமாக 136, சமூக பாதுகாப்பு திட்டம் 54, வேலைவாய்ப்பு வேண்டி 70, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 97 மற்றும் இதர துறை 87 என, மொத்தம் 444 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

