sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேர்வழியில் ஏரிகளை பாதுகாக்க கலெக்டருக்கு மக்கள் மனு

/

தேர்வழியில் ஏரிகளை பாதுகாக்க கலெக்டருக்கு மக்கள் மனு

தேர்வழியில் ஏரிகளை பாதுகாக்க கலெக்டருக்கு மக்கள் மனு

தேர்வழியில் ஏரிகளை பாதுகாக்க கலெக்டருக்கு மக்கள் மனு


ADDED : செப் 07, 2025 10:15 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:தேர்வழி ஊராட்சியில் சீரழிந்து வரும் ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என, கலெக்டருக்கு கிராம மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பிரித்வி நகர் பின்புறம், 7.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆழ ஏரி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள ஆழ ஏரிக்குள், பிரித்வி நகர், நேதாஜி நகர் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

தேர்வழி ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால், ஏரி மாசடைந்து, நீராதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், கோட்டக்கரை பின்புறம், 5.67 ஏக்கரில் தாமரை ஏரி உள்ளது.

ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரிக்குள், கோட்டக்கரை பகுதியின் கழிவுநீர் விடப்படுகிறது. இதனால், தாமரை ஏரி முழுதும் கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது.

இந்த இரு ஏரிகள் மாசடைந்து வரும் நிலையில், நிலத்தடி நீரின் தன்மையும் பாதிக்கப்பட்டு வருகிறது. தேர்வழி ஊராட்சியின் நிலத்தடி நீர், பருகுவதற்கு தரமான குடிநீராக இருந்த நிலையில், தற்போது தரம் குறைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இரு ஏரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டருக்கு தேர்வழி ஊராட்சி மக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டது.






      Dinamalar
      Follow us