/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் குட்டையாக மாறி வரும் பெருவாயல் வாலி தீர்த்த குளம்
/
கழிவுநீர் குட்டையாக மாறி வரும் பெருவாயல் வாலி தீர்த்த குளம்
கழிவுநீர் குட்டையாக மாறி வரும் பெருவாயல் வாலி தீர்த்த குளம்
கழிவுநீர் குட்டையாக மாறி வரும் பெருவாயல் வாலி தீர்த்த குளம்
ADDED : நவ 07, 2024 01:05 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் அருகே பரந்து, விரிந்து காணப்படும் வாலி தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில், வாலி புனித நீராடி, அங்குள்ள சிவனை வழிபட்டதால், சிவனை திருவாலீஸ்வரர் என்றும், குளத்தை வாலி தீர்த்தம் என்றும் பெயர் கொண்டு அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இக்குளத்தில் கழிவுநீர், குப்பை கழிவுகள் கலந்து அசுத்தமாகி, பெரும்பாலான பகுதிகள் துார்ந்து போய் புதர்கள் மண்டியுள்ளன. ஆன்மிக பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் வாலி தீர்த்த குளம், தற்போது பரிதாப நிலையில், கழிவுநீர் குட்டை போன்று காட்சியளிக்கிறது.
எனவே, குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பெருவாயல் கிராமத்தின் முக்கிய நீராதாரமான இக்குளத்தை, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.