/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேட்டைக்காரர் தோட்டாவுக்கு வளர்ப்பு நாய் உயிரிழப்பு
/
வேட்டைக்காரர் தோட்டாவுக்கு வளர்ப்பு நாய் உயிரிழப்பு
வேட்டைக்காரர் தோட்டாவுக்கு வளர்ப்பு நாய் உயிரிழப்பு
வேட்டைக்காரர் தோட்டாவுக்கு வளர்ப்பு நாய் உயிரிழப்பு
ADDED : ஜன 02, 2025 09:12 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த, ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 55; இவர், சிப்பிப்பாறை இன நாயை வளர்த்து வந்தார். நேற்று காலை, அவரது நாயுடன் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேட்டைக்காரர்களை அந்த நாய் துரத்தி சென்றது.
நாய் துரத்தியதில், அச்சம் அடைந்த வேட்டைக்காரர், அவர்களின் நாட்டு துப்பாக்கியால் அந்த நாயை சுட்டு கொன்றனர்.
இது குறித்து, டில்லிபாபு பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அவர்கள், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஷாகோட், 60, மற்றும் அவரது உறவினர் என தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.