sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீடியன் வளைவுகளில் செடிகள், மரண பள்ளங்கள் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை அவலம்

/

மீடியன் வளைவுகளில் செடிகள், மரண பள்ளங்கள் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை அவலம்

மீடியன் வளைவுகளில் செடிகள், மரண பள்ளங்கள் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை அவலம்

மீடியன் வளைவுகளில் செடிகள், மரண பள்ளங்கள் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை அவலம்


ADDED : ஜன 13, 2025 11:54 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் மரண பள்ளங்கள், மீடியன், வளைவுகளில் வளர்ந்துள்ள செடிகள் உள்ளிட்ட பல்லேறு காரணங்களால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன.

சென்னை - நெல்லுார் தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் பகுதியில் இடதுபுறம் செல்லும் சாலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை வரை, 31 கி.மீ., துாரத்திற்கு, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இச்சாலையில், பள்ளிகள், கல்லுாரி, பவானியம்மன் கோவில், வங்கி, டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் நிலையம் போன்றவை உள்ளன. சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி, கடப்பா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இச்சாலை வழியே பயணிக்கின்றன.

குறிப்பாக, சூளைமேனி கிராமத்தில் இருந்து, வலதுபுறம் செல்லும் சாலையில், தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்கிருந்து மூலப்பொருட்கள் எடுத்து வருதல், தயார் செய்த பொருட்கள் கொண்டு செல்லுதல் என, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

போக்குவரத்து மிகுந்த இச்சாலை, தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை மரண பள்ளங்கள் நிறைந்தும், மீடியன் மற்றும் வளைவுகளில் செடிகள் வளர்ந்தும், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.






      Dinamalar
      Follow us