sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தடம்மாறும் இளைஞர்களை காக்க விளையாட்டு மைதானம் அவசியம்

/

தடம்மாறும் இளைஞர்களை காக்க விளையாட்டு மைதானம் அவசியம்

தடம்மாறும் இளைஞர்களை காக்க விளையாட்டு மைதானம் அவசியம்

தடம்மாறும் இளைஞர்களை காக்க விளையாட்டு மைதானம் அவசியம்


ADDED : ஜூலை 26, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:இளைஞர்களை தவறான வழிகளில் இருந்து பாதுகாக்க விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவாலங்காடில், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், கிரிக்கெட், தடகளம், பூப்பந்து, டென்னிஸ் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

பலர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் பயிற்சி பெறுவதற்கான விளையாட்டு மைதானங்கள் இல்லை. இக்கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது.

அதில், தங்கள் பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், போதை பழக்கத்தில் சிக்கி, தடம்மாறும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, திருவாலங்காடு இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us